உக்ரைனின் சபோரிஜியா ((Zaporizhzhia)) நகர் மீது ரஷ்யா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 30 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவத்துள்ள அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி, சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்தும், ஒரு நகரத்தின் மீது வான்வழி குண்டுவீச்சு நடத்துவதை விட கொடூரமானது எதுவுமில்லை என கூறியுள்ளார்.