Also Watch
Read this
Posted on: Nov 09, 2025 05:26 AM
By: Web Team

பிரதமர் மோடி பங்கேற்ற வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். பாடல் பாடப்பட்டதற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு காலத்தில் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் அடையாளமாக நின்ற ரயில்வே, இப்போது வகுப்புவாத சித்தாந்தத்தை விதைக்கும் ஒரு கருவியாக மாறி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஆபத்தான செயலை எதிர்க்க வேண்டும் என்றும் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved