Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காலை முதல் வினாடிக்கு 31 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணை நிரம்பியதை அடுத்து 16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கபட்டதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved