Also Watch
Read this
By: Manigandan Raja

ரேகையை நுணுக்கமாக ஆராய்ந்து விவரங்களை தரும் ஏ.ஐ :

உலகம் முழுவதும் பிரபலமான ChatGPT, தற்போது ஜோதிடர்களை போல கை ரேகையை ஆராய்ந்து எதிர்காலத்தை கணித்து கூறுவதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஏற்கனவே பல செயலிகள் இருந்தாலும்.
அவைகளை போல் மேம்போக்காக அல்லாமல் ஒவ்வொருவர் கையிலும் உள்ள தனி ரேகை, அதன் நீளம், வடிவம் ஆகியவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து, அதற்கான புத்தகங்களில் இருந்து தரவுகளை நமக்கு தரும் என சொல்லப்படுகிறது. ஆனாலும் இதனை 100 சதவிகிதம் நம்ப முடியாது என கருத்துதெரிவிக்கும் நெட்டிசன்கள், முதலில் ஐடி ஊழியர்கள் வேலையை பறித்த ஏஐ தற்போது ஜோதிடர்களையும் விட்டு வைக்கவில்லை என கலாய்த்து வருகின்றனர்.
செப்டம்பர் 8-ம் தேதிக்கு பிறகு வாட்ஸ் அப் இயங்காது :

Android 6-க்கும் குறைவான software-களில் இயங்கும் செல்போன்களில் இனி வாட்ஸ் அப் செயலி இயங்காது என மெட்டா அறிவித்துள்ளது. தற்போது Android 5-க்கு மேலே உள்ள சாதனங்களில் வாட்ஸ் அப் இயங்கி வரும் நிலையில், செப்டம்பர் 8-ம் தேதிக்கு பிறகு Android 6-க்கும் மேலே உள்ள போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved