கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் கனமழை காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மக்கள் ஆபத்தை உணராமல் பள்ளி குழந்தைகளுடன் பாலத்தை கடந்து சென்றனர். தயமுனாஷி கிராமத்தில் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால், பள்ளி மற்றும் அன்றாட பணிக்கு செல்ல முடியாமல் மாணவர்களும், மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.