மதுரவாயல் அருகே மின் கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 1,000 ரூபாய் கட்ட வேண்டிய நுகர்வோருக்கு 7,000 ரூபாய் எனவும் 10,000 ரூபாய் கட்டும் நுகர்வோருக்கு ஒரு லட்சம் ரூபாய் என மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர்கள் பாதிப்புக்கு உள்ளான நிலையில் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதலாக வந்த தொகையை தளர்த்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link காட்டு யானைகள் அட்டகாசம்