டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 15 போட்டிகளில் 25 க்கும் மேற்பட்ட ரன் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை மும்பை அணியில் சூர்யகுமார் நிகழ்த்தியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய 15 போட்டிகளிலும் 25க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து சூர்யகுமார் யாதவ் அசத்தியுள்ளார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 33 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தினார்.