Also Watch
Read this
Updated: Apr 29, 2025 04:15 AM
By: Srini Vasan
அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மனோ தங்கராஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வகித்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ராஜகண்ணப்பனிடம் இருந்த பால்வளத் துறை, மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2025. All rights reserved