Also Watch
Read this
9 பேருக்கும் மரண தண்டனை
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்துறையினரால் அடித்துக் கொ*லப்பட்ட வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து அதிரடி தீா்ப்பு
இன்ஸ்பெக்டர், SI உள்ளிட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் தீா்ப்பு

“ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது”
தந்தை முன் மகனையும் மகன் முன்பு தந்தையையும் நிா்வாணப்படுத்தி மனம்போன போக்கில் தாக்கி உள்ளனா்
ஒரேநேரத்தில் ஒரு குடும்பத்தின் ஆணி வேரான தந்தையும் மகனும் கொ*லப்பட்டுள்ளனா்
எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொருளாதார ரீதியிலும் தண்டனை வழங்கப்பட வேண்டும்

மரண தண்டனையே சிறந்தது
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்துறையினரால் அடித்துக் கொ*லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது
சாதாரண நபா்கள் இதே குற்றம் செய்திருந்தால் சாதாரண தண்டனை வழங்கலாம், ஆனால் போலீசாரே குற்றம் செய்துள்ளனா்
மரண தண்டனை தான் வழங்க வேண்டுமா? என்பதையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது
"ஆயுள் தண்டனையால் அச்சம் ஏற்படாது"
லாக்அப் மரண வழக்குகளில் ஆயுள் தண்டனை விதித்தால் இதுபோன்று செயல்படும் போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது
லாக்அப் மரணங்களில் நேரடி சாட்சிகள் இருக்காது, ஆனால் சாத்தான்குளம் வழக்கில் CCTV ஆதாரங்கள் உள்ளது

“மிக கொடியது”
காவல் நிலைய மரணம் மிக கொடியது; காவல்நிலையத்தில் இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்
மத்திய அரசுத்தரப்பில் உட்சபட்ச தண்டனை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பழி வாங்க வேண்டுமென்ற நோக்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது; எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பும் அதிகமுள்ளது
- நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved