பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா, அந்த நடவடிக்கைகள் பிராந்திய அளவிலான போருக்கு வழிவகுக்காத வண்ணம் கவனமாக கையாளும் என அமெரிக்கா நம்புவதாக அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிக்க இந்தியாவுக்கு, பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.