Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 08:14 AM
By: Fyrose Banu

பல்லடம் அருகே உடுமலை சாலை பிரிவு சித்தம்பலம் பகுதியில் பறக்கும் படை பரிசோதனையில் 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். உடுமலைப்பேட்டையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்ததாக மௌலேஷ் மற்றும் அவரது மனைவி நந்தினி மற்றும் அவர்கள் தாயாருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது கணக்கில் இல்லாமல் வங்கி அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு பணம் பெற்று வந்ததாக ஸ்டேட்மெண்ட் உடன் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சரவணன் முன்னிலையில் காண்பித்து பணத்தை திரும்பக் கூறி மன்றாடினர்.
அழுது மன்றாடிய இளம்பெண்
அப்போது மௌலிஸ்வரன் அவரது மனைவி நந்தினி அழுது கொண்டே மன்றாடி நின்று கொண்டிருந்தனர். மேலும் தேர்தல் ஆணையம் பண பட்டுவாடா பொதுமக்களுக்கு வாக்களிப்பதற்காக பணத்தை விநியோகிக்க கூடாது என்ற நோக்கத்தில் 50 ஆயிரம் தொகையை அதற்கு மேல் உண்டான தொகைக்கு போக்குவரத்தின் போது உரிய ஆவணம் வேண்டும் இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும் என்ற நிலை உள்ளது.
அப்பாவி மக்களின் பணத்தை திரும்ப கொடுக்க கோரிக்கை
இந்நிலையில் மருத்துவ செலவு மற்றும் பல தொழில் சார்ந்து செல்ப்வர்கள் கொண்டு செல்லும் ஒரு லட்சம், இரண்டு லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்வதால் கடும் சூழ்நிலைக்கு ஆளாகவும், அப்பாவி பொதுமக்களை இதில் பலியாகக் கூடாது என்றும் உடனுக்குடன் அப்பாவி மக்களிடம் பறிமுதல் செய்யும் பணத்தை உடனடியாக விசாரணை மேற்கொண்டு திரும்ப வழங்க வேண்டும் பல்லடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள்னர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved