அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் உடனடியாக கையெழுத்திட்டு இஸ்ரேலின் குண்டு வீச்சில் இருந்து தப்பித்துக் கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவறுத்தி உள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் மத்திய கிழக்கில் ஆபத்து அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள அவர், போரை தடுக்க அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு இப்போது ஒரு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.இஸ்ரேலின் தாக்குதலை தவிர்க்க தமது தேசிய பாதுகாப்பு குழுவினரை சந்தித்து பேசுமாறும் அவர் ஈரானை கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்ரேல் மீதான தாக்குதலில் தங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என டிரம்ப் கூறினாலும், அமெரிக்கா வழங்கிய நாசகார ஆயுதங்களால் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.