இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4 புள்ளி 6 ஆக பதிவாகியுள்ள நிலையில் நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விடுத்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த விவரம் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.