நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு தளத்தில் தோசை மாஸ்டராக மாறி படக்குழுவினருக்கு சுடச்சுட தோசை சுட்டு கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் நடந்த ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்“தோசை வேணுமா… தோசை!”படப்பிடிப்பு இடைவெளியில் திடீரென சமையல் பகுதிக்கு சென்ற அவர், அங்கிருந்த குழுவினருக்காக சுடச்சுட தோசை சுட்டு பரிமாறினார். “தோசை வேணுமா… தோசை!” என்று உற்சாகமாக அழைத்து, அனைவரையும் வரிசையில் நிற்க வைத்தார்.ஐஸ்வர்யா ராஜேஷ் சுட்ட தோசையை படக்குழுவினர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி உண்டனர். இதனை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார். Related Link இந்திய அணியையே திணறடித்த இந்தியர்கள்