Also Watch
Read this
Posted on: Nov 10, 2025 07:10 AM
By: Web Team

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை குறித்து, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய குழு கலைக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்ட குழு, கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் ஆய்வு மேற்கொண்டனர். நாளை மறுநாள் அணை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இன்று ஆய்வு செய்த குழுவினர், மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதிகளிலும், ஷட்டர்களை இயக்கிப் பார்த்தும் சோதனை செய்தனர். இதையும் பாருங்கள் - முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு | Mullaperiyar Dam | Inspection | Kerala
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved