ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான செனாப் ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாலத்தின் வழியாக கடந்து செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையொட்டி ஜம்மு காஷ்மீரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.