Also Watch
Read this
By: Web Team

தேர்தல் ஆணையம் மீதான வாக்கு திருட்டு குற்றச்சாட்டுக்கு ராகுல்காந்தி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகாவின் மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான போலி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்ததாக கூறி அதற்கான ஆதாரங்களை ராகுல்காந்தி வெளியிட்டார்.
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு தவறானது எனக்கூறிய தேர்தல் கமிஷன், தவறாக சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழி ஆவணத்துடன் தாக்கல் செய்ய கூறியிருந்தது.
அவ்வாறு செய்ய முடியாது என ராகுல்காந்தி கூறியிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved