எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். டெஸ்லா நிறுவனம் நாட்டில் ஷோரூம்களைத் திறந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.அதேசமயம் மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா, ஹூண்டாய் மற்றும் கியா ஆகியவை இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த அவர், நாட்டின் மின்சார கார் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக இறக்குமதி வரிகளை கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.