பிரதமர் மோடிக்கு ட்ரினிடாட்டொபாகோ நாட்டின் உயரிய விருதினை அந்நாட்டு அதிபர் கிறிஸ்டின் கங்காலு வழங்கி கவுரவித்தார். அரசு முறை பயணமாக ட்ரினிடாட் டொபாகோ நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு அவருக்கு தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ என்ற சிவிலியன் விருது வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு என்ற திருக்குறளை மேற்கொள் காட்டி உரை நிகழ்த்தினார். மேலும், ட்ரினிடாட் டொபாகோ அதிபர் கிறிஸ்டின் கங்காலுவின் முன்னோர்கள் திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.