Also Watch
Read this
By: Web Team

முன்னதாக இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை நமீபியா அதிகாரிகள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, நிறைவாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு சென்றார்.
அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பிரதமர், ஏழைக் குடும்பத்தில் பிறந்த தனக்கு 3 முறை பிரதமராகும் வாய்ப்பை வழங்கியது இந்திய அரசமைப்புச் சட்டம் என பெருமிதம் கூறியபோது அந்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்தியாவில் எந்த பிரதமரும் செய்யாத சாதனையாக பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் 17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved