Also Watch
Read this
By: Web Team

கோடிக்கணக்கில் வங்கி மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டு தப்பி ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரரான நேஹல் மோடி அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
வங்கி மோசடி வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதால் அவரை பிடித்து இந்தியாவுக்கு நாடு கடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அமெரிக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வரும் 17 ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது ஜாமின் கேட்டாலும் அரசு தரப்பு அதை தீவிரமாக எதிர்க்கும் என தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved