Also Watch
Read this
Posted on: May 02, 2025 09:04 AM
By: Srini Vasan

சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற விமானப்படை துணை தளபதி, சுஜீத் புஷ்பகர் தர்க்கர்,பாகிஸ்தானுக்கு எதிராக போர்புரிய மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஆதரவுசமூக வலைதளங்கில் பரவிய தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த தகவல்வெறும் வதந்தி என கூறியுள்ள மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு, சுஜீத் புஷ்பகர் தர்க்கர் தனது 40 ஆண்டுகால விமானப்படை சேவையை துணை தளபதியாக நிறைவு செய்து, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி முறைப்படி பணி ஓய்வு பெற்றதாக விளக்கம் அளித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved