இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போதும் போல வழக்கமான சண்டைதான் நடைபெற்றதாகவும், அவர்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அவர் விளக்கம் அளித்தார்.