சிக்கிம் மாநிலத்தில் இடைவிடாத கனமழையால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை மத்திய ஆயுதக் காவல் படையினர் மீட்ட பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.சிக்கிம் மாநிலத்தில் பெய்த இடைவிடாத மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டீஸ்டா உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.