கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக, ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இம்மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. வீடுகள், சாலைகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.