news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews பெற்ற மகனுக்கு எமனாக மாறிய தாய்
tv

Also Watch

tv

Read this

பெற்ற மகனுக்கு எமனாக மாறிய தாய்

மஞ்செரியல், தெலங்கானா

28

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மகனை அடித்துக் கொன்ற தாய். இறந்த மகனை பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் அமைதியாக அமர்ந்திருந்த கொடூரம். பத்து மாதம் சுமந்து பெற்ற தாயே மகனுக்கு எமனாக மாறியது ஏன்? பின்னணி என்ன?

உலக்கையால் அடித்தே...
தெருவுல சிறுமிகள் நிறையபேர் விளையாடிட்டு இருக்காங்க. பெண்கள் சிலர் நடந்து போயிட்டு இருக்காங்க. அப்ப திடீர்னு ஒரு அம்மா, இளைஞரோட தலையில உலக்கையால ஓங்கி அடிச்சிருக்காங்க. அடிச்ச அடியிலேயே அந்த இளைஞர் உயிரிழந்துட்டாரு. அடுத்து, அங்க வந்த போலீஸ் இளைஞரோட சடலத்த போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சிட்டு இளைஞரை கொன்ன அம்மாவ கைது பண்ணி விசாரணை பண்ணிருக்காங்க. அதுல இளைஞர உலக்கையால அடிச்சி கொன்னதே அவரோட அம்மாதான்னு தெரியுது.

Related Link
மூதாட்டியை குழி தோண்டி புதைத்த குடும்பத்தினர்

மூதாட்டியை குழி தோண்டி புதைத்த குடும்பத்தினர்


தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்து ரகளை

தெலங்கானா மாநிலம், மஞ்சரியாலா பகுதிய சேர்ந்த சங்கரம்மாவுக்கு, ஒரு மகன், ஒரு மகள். அதுல மூத்த மகன் ஸ்ரீனிவாசன தான் சங்கரம்மா உலக்கையால அடிச்சி கொன்னுருக்காங்க. தெனமும் நைட் மதுபோதையில வீட்டுக்கு வரதையே வழக்கமா வச்சிருந்த ஸ்ரீனிவாசன், வீட்டுக்கு வந்தோமா, அமைதியா படுத்து தூங்குனோமான்னு இல்லாம, பெத்தவங்க கிட்ட தெனமும் தகராறு பண்ணி டார்ச்சர் பண்ணதா சொல்லப்படுது.

மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு
வயதான அம்மாவுக்கு, தான் சம்பாதிச்சு பணம் கொடுக்காம, மது குடிக்கிறதுக்கு காசு கேட்டு, பெத்தவங்கள அடிச்சு உதச்சு துன்புறுத்திட்டு இருந்ததாவும் சொல்லப்படுது. எனக்கு வயசாகிப் போச்சு, இதுக்கு மேல என்னால வேலை பாத்து சம்பாதிக்க முடியாது, குடிப்பழக்கத்த விட்டுட்டு வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கிற வழிய பாரு, நீ சம்பாதிச்சு எங்களுக்கு கொடுக்க வேண்டும், குறைஞ்சபட்சம் உன்ன நீ பாத்துக்குற அளவுக்கு சம்பாதிச்சா போதும்னு தாய் சங்கரம்மாவும், ஸ்ரீனிவாசன்கிட்ட அட்வைஸ் பண்ணி எவ்வளவோ போராடிருக்காங்க. ஆனா, தாயோட எந்த அறிவுரையும் ஸ்ரீனிவாசன் மனசல மாத்தல.

Related Link
குடும்பத்தை எரிக்க முயன்ற குட்டி துர்கா

குடும்பத்தை எரிக்க முயன்ற குட்டி துர்கா

தாயை அடித்து கொடுமைப்படுத்திய சீனிவாசன்
ஒருநாள் நைட்டு, வழக்கம் போல வீட்டுக்கு ஃபுல் போதையில வந்திருக்காரு ஸ்ரீனிவாசன். வீட்டுக்கு வந்ததும் வராததுமா, வாசல்ல நின்னுட்டு இருந்த தாய் சங்கரம்மாகிட்ட, செலவுக்கு பணம் கேட்டு தகராறு பண்ணிருக்காரு. குடிச்சிட்டு வந்ததும் இல்லாம, மேற்கொண்டு பணம் கேட்டு பிரச்சினை பன்றியா, பேசாம போய் படுன்னு கோவமா சொல்லிருக்காங்க சங்கரம்மா. ஆனா, இப்ப பணம் கொடுக்கலன்னா நடக்குறதே வேறன்னு சொல்லி ஸ்ரீனிவாசன் போதையில எகிறுனது மட்டுமில்லாம, தகாத வார்த்தைகள் பேசி, பெத்த தாயவே அடிக்க பாஞ்சதா சொல்லப்படுது. இப்படியே, தாயிக்கும், மகனுக்கும் இடையில மோதல் அதிகமாகிருக்கு. தெனமும் குடிச்சிட்டு வந்து கண்டபடி பேசி, வயசானவங்கன்னு கூட பாக்காம இப்படி கை நீட்டுறியேன்னு சங்கரம்மா ஆதங்கத்தோட கேட்டுருக்காங்க. ஆனா அப்பவும் அடங்காத ஸ்ரீனிவாசன் தொடர்ந்து ரகளை பண்ணிட்டு இருந்துருக்காரு. ஒருகட்டத்துல, பொறுமை இழந்த தாய் சங்கரம்மா, ஸ்ரீனிவாசன கீழ தள்ளிவிட்டுட்டு, மகனோட தலையிலேயே உலக்கைய வச்சு ஆத்திரம் தீர அடிச்சிருக்காங்க.

சங்கரம்மாவை கைது செய்து போலீசார் விசாரணை
இந்த சம்பவத்த பாத்து அந்த வழியா போன மக்களும், அக்கம்பக்கத்துல இருந்தவங்களும் தடுக்குறதுக்காக ஓடி வந்துருக்காங்க. ஆனா, ஸ்ரீவாசனுக்கு தலை பகுதில அதிகபடியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்துலேயே உயிரிழந்துட்டாரு. விசாரணையில மொத்த உண்மையும் தெரியவரவே, சங்கரம்மா மேல கொலை வழக்குப்பதிவு பண்ண போலீஸ் அவங்கள அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க.

Related Link
துரோகத்தால் நடந்த கொடூர சம்பவம், தலையில்லாமல் கிடந்த பெண்ணின் சடலம்

துரோகத்தால் நடந்த கொடூர சம்பவம், தலையில்லாமல் கிடந்த பெண்ணின் சடலம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

1
9 hrs 53 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved