Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் புழு முட்டைகள் கிடந்தது மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழவலம் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையில் வாங்கி மதுபாட்டிலில் புழு முட்டைகள் கிடந்த நிலையில், இது குறித்து ஊழியரிடம் கேள்வி எழுப்ப அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved