Also Watch
Read this
By: Web Team

கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை, வால்பாறை, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்ப்பதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவி நீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், ஆழியார் சோதனைச் சாவடியிலேயே சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved