வேடசந்தூர் அருகே கோவில் திருவிழா தொடர்பான பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்திய, வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், தங்களை முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விடுங்கள் என கூறியதாக கண்டித்து, கிராம மக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். கடந்த மூன்று வருடங்களாக உள்ள கோவில் பிரச்சனை தொடர்பாக ஆய்வாளர் கண்ணன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறிய கிராம மக்கள், குறிப்பிட்ட 8 பேருக்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.இதையும் படியுங்கள் : ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம்... தொழில்நுட்ப கோளாறால் விமானம் திரும்பி சென்றது