Also Watch
Read this
Posted on: May 07, 2025 04:06 AM
By: Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் வேதகிரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விநாயகர், வேதகிரீஸ்வரர், திருபுரசுந்தரி அம்மன், வள்ளி தெய்வானையுடன் முருகன், மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் 4 மாட வீதிகளிலும் வலம் வந்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved