நாகை மாவட்டம் வடக்காலத்தூர் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி உற்சவ திருவிழாவில், திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, முத்துமாரியம்மன், பிடாரியம்மன், வீரகாளியம்மன், வெங்கடேச ஐயனார், மன்மதன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.