தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.வீரசிகாமணி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான அரிய நாயகிபுரம், அச்சம்பட்டி, அருணாசலபுரம், திருமலாபுரம் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, மின்வெட்டு பிரச்சனையை சரிசெய்து சீரான மின்சாரத்தை வழங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.