தேனியில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், தந்தத்துக்காக யானை வேட்டையாடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். மேகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட பொம்மராஜபுரத்தை சேர்ந்த பொம்மராஜ், கடமலைக்குண்டு பாண்டீஸ்வரன், மயிலாடும்பாறை மகாலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து தன்னிடமுள்ள 2 யானை தந்தங்களை விற்க முயன்றார். பெரியகுளம் அருகே பங்களாப்பட்டியை சேர்ந்த பாலாஜி, ஈஸ்வரன் ஆகியோரிடம் விற்க முயன்றபோது 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் 4 முதல் 5 வயதுடைய யானையுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர்.