நாகை அகத்தீஸ்வரர் கோயிலில் புதிதாக கட்டமைக்கப்பட்ட திருத்தேர் வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர். வெளிப்பாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயில் புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்றதும், அகத்திய முனிவர் சிவனை வழிபட்டதுமான சிவத்தலமாகும், திருத்தேர் வெள்ளோட்டம்இந்த திருக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை பக்தர்கள் உதவியுடன் சார்பில் ரூ.40 லட்சம் செலவில் சுவாமிக்கு புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதன் பணிகள் நிறைவடைந்த பின்னர் சாலை பூஜைகள் முடிவடைந்து இன்று வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் திருத்தேரை ஆரூரா தியாகியாச என முழக்கமிட்டு வடம்பிடித்து இழுத்து சென்றனர். Related Link கோயில் கும்பாபிஷேக பெருவிழா