விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை கொன்று, உடலை சாக்கு மூட்டையில் கட்டி விவசாய கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி முருகன் என்பவரது சடலம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், காசியின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.