தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள பழமை வாய்ந்த பரமசிவன் மலைக்கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. 800 அடி உயர குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு வண்ண பூக்கள் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.