Also Watch
Read this
By: Manigandan Raja

ஊழியரை தாக்கிய மர்மநபர்கள் :
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சூரக்காடு பகுதியில் நவகிரகா கபே இயங்கி வருகிறது. பகல், இரவு என 24 மணி நேரமும் இயங்கி வரும் இந்த காபி கடையில் நள்ளிரவு டீ குடிக்க வந்த நபர்கள் டீ, ஸ்னாக்ஸ் சாப்பிட்டுவிட்டு அதற்கான பணம் கொடுப்பதில் விலை அதிகமாக உள்ளதாக கூறி கடை மேலாளர் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மேலாளர் சக்திவேலை அந்த நபர்கள் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த கடை ஊழியரையும் தாக்கும் CCTV காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதுகுறித்து கடை உரிமையாளரும்,அனைத்து வணிகர்கள் நல சங்க மாவட்ட செயலாளருமான சுரேஷ் இரவுக்கடை நடத்தும் வணிகர்களுக்கு பாதுகாப்பு இல்லை,இது போன்ற நபர்களால்
அடிக்கடி கடைகள் சேதம் ஏற்படுவதாக கூறி இனி இரவுக்கடை நடத்தப் போவதில்லை என வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்துள்ளார்.
வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் CCTV காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved