Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சிக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீரினை ஆதாரமாக பயன்படுத்தி சுமார் 500 க்கும் மேற்பட்ட
விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் வாழை, தென்னை, நெல் என 600 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்
இந்தநிலையில் கண்மாயில் மணல் அள்ளிக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் போர்வையில் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளிடம்
அனுமதி பெற்று கண்மாயில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக அதிக ஆழத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகள் மூலம் கிராவல்மண் திருடி அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
மணல் அள்ள 4 அடி மட்டுமே அனுமதி பெற்று சட்டவிரோதமாக சுமார் 15 அடி தூரம் ஜேசிபி மூலம் மணல் திருட்டு நடைபெறுவதால் கண்மாயில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதோடு,
நீராதாரமே முற்றிலும் அழிந்துவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved