நதிகளை இணைக்காமல் தேசத்தின் நீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தொடங்கிய தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்ற அவர், அப்படியொரு வாய்ப்பு பிரதமர் மோடியால் உருவாகும் எனவும், இதை அரசியலாக பார்க்க வேண்டாம் எனவும், தியாகராஜர் சமாதியில் கூறினால் பலிக்கும் என்பதால் கூறியதாகவும் தெரிவித்தார்.