Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில், பேருந்தின் முன்படிக்கட்டில் ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்த இளம்பெண்ணின் மீது அந்த பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநெய்பூர் அருகே பூதமங்கலசேரி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் மீரா திருவாரூரில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு வந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வீட்டிற்கு செல்ல பேருந்தில் ஏறியபோது விபத்து நேர்ந்தது. திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved