Also Watch
Read this
Posted on: Nov 28, 2025 11:59 AM
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் தேங்கிய மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றி பிரதான சாலையில் விடுவதால் சாலை பழுதடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பணிமனையில் 10 நாட்களுக்கு மேல் மழைநீர் தேங்கியதால் சிரமம் அடைந்த போக்குவரத்து பணியாளர்கள் தேங்கிய மழைநீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சி திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் விட்டனர். இதனால் சிரமம் அடைந்த வாகன ஓட்டிகள் தேங்கிய மழை நீரை அகற்றி சாலையோர மழை நீர் வடிகாலில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved