திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ மீது லாரி மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. வள்ளியம்மபுரம் பகுதியில் போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் திவாகர் என்பவர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, திருத்தணி நோக்கி வந்த லாரி மோதி சென்றது. காவலர் திவாகர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.