திருச்சியில் தந்தையை கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர். சோமசுந்தரம் என்பவர் மது போதையில் வீட்டில் இருந்தவர்களுடன் தகராறு செய்தார். அதை, மகன் மோகன்ராஜ் தட்டி கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மோகன் ராஜ், மரக்கட்டையால் தலையில் தாக்கியதில் சோமசுந்தரம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.