நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால், கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறையினர் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி, மண்சரிவு ஏற்பட்ட இடங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொண்டை ஊசி வளைவுகளில் மழை நீர் சிற்றாறுபோல பெருக்கெடுத்து ஓடி மண்சரிவு ஏற்படுகிறது.