காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற வெள்ளி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை ஒட்டி, சுவாமிக்கும் வள்ளி - தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, வள்ளி - தெய்வானையுடன் முருகப் பெருமான் வெள்ளித் தேரில் எழுந்தருள, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.