தருமபுரி மாவட்டம் ஆலங்கரை கிராமத்தில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி ஸ்ரீதேவி பூதேவி உடன் சென்னகேசவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.