Also Watch
Read this
By: Web Team

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 மூட்டை குட்காவை பறிமுதல் செய்து கடை உரிமையாளரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், திம்மனாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த வாசு, மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர், சுமார் 11 மூட்டைகளில் குட்காவை காரில் பதுக்கி வைத்து உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தனிப்படை போலீசார் வாசு கடை மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, காரில் 11 மூட்டைகளில் குட்காவை பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
குட்கா பதுக்கி வைத்து இருந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், வாசு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கார் மற்றும் இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved