வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பொங்கல் அரிசி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வரதராஜ் என்பவர் மகன் பிரபு உடன் சேர்ந்து சீட்டு நடத்தி வந்த நிலையில், பணத்துடன் மாயமாகியுள்ளார்.