கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கியதாக, நில அளவையர் மற்றும் இடைத்தரகர் கைது செய்யப்பட்டனர். திம்மாபுரம் அருகே உள்ள காந்திநகரை சேர்ந்த நாகராஜ், தனது இடத்துக்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பித்த நிலையில், நில அளவையர் குமரன், இடைத்தரகர் சுஹேல் மூலமாக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார்.