Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே 3 நாட்களுக்கும் மேலாக குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். புலியூர் கண்டிகை கிராமத்தில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக குற்றம்சாட்டும் மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட இடுப்பளவு தண்ணீரில் சென்று பொருட்களை வாங்கக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், இதுவரை அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved